உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

2/17/2012

| |

கிழக்குமக்களின் பிரதிநிதிகளுடன் பேச முன்வராத கூட்டமைப்பினர் அரசாங்கத்துடன் பேசி தீர்வைப் பெற்றுத் தருவார்களா? கிழக்கு முதல்வர்

கடந்த 01.01.2012 அன்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தேன் அக்கடிதத்தில் கூட்டமைப்பின் அரசுடனான பேச்சுவார்த்தைகளின்போது வடக்கு கிழக்கு இணைப்பு தவிர்ந்த பொலிஸ் காணி அதிகாரங்கள் தொடர்பாக பேசப்படும்போது அதற்கு அதரவு வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடாத்த நாம் தயாராக இருக்கின்றோம் என்று குறிப்பிட்டு அனுப்பி இருந்தேன். ஆனாலும் சம்பந்தனிடம் இருந்து இன்னும் பதில் கிடைக்கவில்லை. இனிமேலும் பதில் கிடைக்கும் என்று நம்பிக்கை இல்லை. என்று மடஃகளுதாவளை மகா வித்தியாலய வருடாந்ந இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் உரையாற்றுகையில் ஒரு தமிழ் கட்சியன் தலைவராகவும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு முதலமைச்சர் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்த அழைப்பு விடுக்கின்றபோது அதனை அலட்சியப்படுத்தி தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி ஒரு இணக்கப்பாட்டுக்கு வர முன்வராத கூட்டமைப்பினர் அரசாங்கத்துடன் பேசி தமிழ் மக்களுக்கு என்ன தீர்வினை பெற்றுத்தரப் போகின்றனர்.

வெறுமனே தமிழ் மக்களை ஏமாற்றி தமிழர்களை படுகுழியில் தள்ளும் முயற்சியில் கூட்டமைப்பினர் ஈடுபடுகி்றனர். எமது கட்சியானது மாகாணசபை முறமைமூலம்தான் தீர்வினைப்பெற முடியும் என்பதனை வலியுறுத்தி வருகின்றோம். அன்று நாம் மாகாண சபையை கைப்பற்றியபோது மாகாணசபை ஒன்று இல்லை என்று சொன்னவர்கள் இன்று மாகாணசபை முறமை தொடர்பாக பேச முன்வருகின்றனர். 

கூட்டமைப்பினரிடம் ஒரு தெளிவான அரசியல் திட்டம் இல்லை. கூட்டமைப்பினரின் இவ்வாறான செயற்பாடுகளை நோக்கி மக்கள் சென்றார்களானால். தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியான நிலைதான். மக்கள் உண்மைகளையும் யதார்த்தங்களையும் இன்றைய தேவைகளையும் உணர்ந்து செயற்பட வேண்டும். கிழக்கு மாகாணம் துரிதமாக வளர்ச்சி அடைந்து வருகின்றது இதனை எவராலும் மறுக்க முடியாது.

நாமும் உலக மாற்றத்திற்கு ஏற்ப மாறவேண்டி இருக்கின்றது. எமது சமூகத்தின் கல்வித்துறை வளர்ச்சிபெற வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். நாம் கல்வித்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம். அதனை கருத்திற்கொண்டு எமது கல்விச் சமூகமும் சிறந்த கல்வியலாளர்களை உருவாக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இவ் விழாவில் முதலமைச்சர் அவர்கள் பொன்னாடை போற்றி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை அதிபர் திருநாவுக்கரசு தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் ந.புள்ளநாயகம் கொளரவ மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உட்பட பல கல்வித்துறை சார்ந்தவர்களும் கலந்துகொண்டனர். 

»»  (மேலும்)

2/16/2012

| |

பிரதீபா தர்மதாஸவின் புதிய இசை இறுவட்டு வெளியீடு; 'அந்திக்கு முன் வாருங்கள்'

லங்கையில் இசைத்துறையின் பாடல்கள் மூலமாக மக்களின் இதயத்தைக் கவர்ந்த சிறந்த பாடகி பிரதீபா தர்மதாஸ 7 ஆண்டு நீண்ட மெளனத்திற்குப் பிறகு தனது புதிய இசை இறுவட்டை வெளியி டவுள்ளார். “ஹெந்தேவட கலின் என்ன” (“அந்திக்கு முன்வாருங்கள்”) என்ற சிங்கள பாடல்கள் அடங்கிய புதிய இறுவட்டினை இவர் வெளியிடவுள்ளார்.
ஏழு வருட நீண்ட கால மெளனத்திற்குப் பிறகு தனது ஆறாவது இறுவட்டாக வெளியிடவுள்ள “அந்திக்கு முன் வாருங்கள்” “புழுதியில் பிறந்த பெண்ணே” மற்றும் “கண்ணீர் கரையோரம்” ஆகிய மூன்று இறுவட்டுகள் வெளியிடப்படவுள்ளன. இவ் இறுவட்டு வெளியீடானது கொழும்பு தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஷ அரங்கேற்ற மண்டபத்தில் எதிர்வரும் 18 ம் திகதி மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இலங்கை இசைத்துறையில் மிகச்சிறந்த புதிய பாடலாசிரியர்களான பேராசிரியர் சுனில் ஆரியரத்தின, இரத்தன ஸ்ரீ விஜேசிங்க, பந்துல நானாயக்காரவசம், டலஸ் அழகப்பெரும ஆகியோர் இப்பாடல்களை எழுதியுள்ளனர்.
பிரதீபா தர்மதாஸ தனது பாடல்கள் மூலம் தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையிலான உறவுப் பாலத்தை அமைப்பது தொடர்பில் தனது புதிய பாடல்களை வெளியிடவுள்ளார்.
கடந்த 30 வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களில் பெண் என்ற வகையில் பார்த்தால் துன்பம், கண்ணீர், இரத்தத்தின் நிறம் என்பது வடக்கில் வாழும் பெண்ணுக்கும் தெற்கில் வாழும் பெண்ணுக்கும் ஒரேமாதிரியாக இருக்கின்றது.
ஒரு பிள்ளை இறந்து போனால் ஒரு தாயின் இதயத்தில்வரும் சோகம் வடக்கு தெற்கு என்று பேதம் இல்லை. இந்த விடயத்தை கலைஞர்களாகிய நாம் சரியாக புரிந்து கொள்ள முடியும் என்பதால் உணர்ச்சிகொள்ள வில்லை என்று நான் நினைக்கிறேன். ஆனாலும் இன்று அந்த நிலைமை முடிந்து விட்டது. இந்த நிலையில் நம் இரு இனங்களுக்குள் சகோதரத்துவத்தை உருவாக்குவதற்காக தமிழ் மொழியும் சிங்கள மொழியும் இந் நாட்டின் பிரதான மொழிகளாக வேண்டும். அத்தோடு இனங்களுக்கிடையிலான உறவுப் பாலத்தை கலைஞர்களுக்கு தான் மிகச்சிறந்த முறையில் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன்.
பல வருடங்களுக்கு முன்பாக யாழ்தேவி என்பது இந்நாட்டில் பயணம் செய்த ஒரு புகையிரத வண்டி அல்ல, அது நமது இனங்களை இணைக்கச் செய்த ஒரு உருவப் பாலமாக இருந்தது. அந்த யாழ்தேவி தாக்குதலுக்கு உட்பட்ட நாள்தான் நமது உருவத்திற்கு மிகப்பெரிய தாக்குதல் நடந்த நாள் என்று நான் நினைக்கி றேன்.
அதனால் தான் இன்று வெளியிடும் எனது புதிய இறுவட்டில் “யாழ்தேவி” என்ற ஒரு புது பாடலையும் நான் சேர்த்துள்றேன். இதன் மூலம் இன சகோதரத்துவத்தின் பாலத்தை அமைப்பதற்காக நான் முயற்சி செய்துள்ளேன். ரத்தன ஸ்ரீ விஜேசிங்க எனும் பாடலாசிரியர் எழுதிய இப்பாடல் மூலமும் என் குரல் மூலமும் நமது சகோதரத்துவத்தின் பாலத்தை அமைப்பதற்காக கலைஞர்களாக நாம் பங்குபெறமுடியுமாயின் அதனால் நான் மிகவும் சந்தோஷப் படுவேன் என்றும் பிரதீபா தெரிவிக்கின்றார்.
புரட்சிகரமான பாடல்களை பாடிய பிரதீபாவின் முதல் இசை இறுவட்டு 1992ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. ஒரு யதார்த்தமான பாடகியான பிரதீபா தனது பாடல்கள் மூலம் மக்களின் பக்கத்திலிருந்து மக்களுக்கு ஏற்பட்ட அவல நிலையைப் பற்றி பேசினார்.
1977 ஆம் ஆண்டில் இலங்கைக்கு அறிமுகமாகிய திறந்த பொருளாதாரத்தால் இலங்கையின் கலாசாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டது என்று “கொலொம் தொட்டின் னெவு னெக்கா” எனும் பாடல் மூலம் பேசினார். கொழும்பு துறைமுகத்தில் கப்பல் ஏறினது நம் மனிதாபிமானம் என்றும் அதற்கு மாறாக கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது இழிவுச் செயல் என்பது அப் பாடலின் அர்த்தமாகும். இவ்வாறு மக்கள் பக்கத்திலிருந்து மக்களுக்கு ஏற்பட்ட அவல நிலைமையை தனது பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியால் அப்போதைய அரசாங்கம் அப்பாடல் உள்ளிட்ட 6 பாடல்களை தடை செய்தது.
சிங்கள பாடல்கள் மட்டுமின்றி தமிழ் பாடலும் பாடிய பிரதீபா 1998 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தனது இரண்டாவது இசை இறுவட்டில் “நீ யாரோ நான் யாரோ” என்ற தமிழ் பாடலை பிரதீபா தனது இனிமையான குரலில் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர் புது இசை தலைமுறையினருடன் இணைந்து வேலை செய்வதை விரும்புகிறார். அதற்கு காரணம் இப் புதிய தலைமுறை புதிய தொழில்நுட்பத்தைக் கையாள்வதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் ஆகும். அதுமட்டும் இல்லாமல் அவர்களை இணைத்துக் கொண்டு வேலை செய்யும் போது நேயர்களுக்கு புதியதொரு இசை அனுபவத்தை வழங்க முடியும் என பிரதீபா தெரிவிக்கின்றார்.
இசை என்பது இக் காலக்கட்டத்தில் பணத்திற்கு விற்கப்படுகின்றது. அந்த பாடல்களைப் போல் நான் என் பாடல்களை விற்க மாட்டேன். மக்களுக்காக ஒரு சிறந்த அர்த்தமுள்ள இசையை வழங்குவது தனது ஒரே நோக்கம் என்று கருதுகிறார்.
பிரதீபா தர்மதாஸ தன் ஆரம்பக் கல்வியை மாத்தறை சுஜாதா கல்லூரியில் கற்றார். கல்வி கற்கும் போதே நாடகத்துறையிலும் ஆர்வம் கொண்டார்.
சோமலதா சுபசிங்க எனும் சிறந்த நடிகையின் வழிகாட்டலின் மூலம் கலைத்துறையில் தனது முதல் காலடியை எடுத்து வைத்தார். இதைத் தொடர்ந்து பல நாடகங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார். இதில் “சிங்கபாகு”, “விகுர்த்தி”, “மூதுபுத்து”, மற்றும் “சத்யாங்கனாவீ” என்பவை இவர் நடித்த நாடகங்காளகும்.
அதன்பின்னர் பிரதீபா இசைத் துறையில் நுழைந்தார். அக்காலக்கட்டத்தின் போது இன்று அமைச்சராக இருக்கும் டலஸ் அழகப்பெரும அவர்களுடன் காதல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் டலஸ் அழகப்பெரும ஊடகவியலாளராக பணியாற்றினார். இவர்களின் திருமணம் 1994 ம் ஆண்டில் நடைபெற்றது.
புதிதாக வெளியிடப்படவுள்ள இசை இறுவட்டுக்கும் பாடலாசிரியராக இணைந்து இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமை ச்சர் டலஸ் அழகப்பெரும் அவர்கள் பிரதீபாவின் இசைப் பயணத் திற்கு உறுதுணையாகவும் இருந்து வருகின்றார்.
»»  (மேலும்)

| |

சிலாபத்தில் கடற்றொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம்: கண்ணீர்ப்புகை: துப்பாக்கி சூடு; ஒருவர் பலி முழுமையான விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு

கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதாக அரசாங்கம் வாக்குறுதியளித்துள்ள வேளையிலும் நேற்று சிலாபம் மீனவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த வேளையில் பொல்லுகளாலும், தடிகளாலும், வாள்களுடனும் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்பட்டனர். ஆர்ப்பாட்டக் காரர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டவேளை சிலாபம் மீனவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமானார்.
மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
சிலாபம் கடற்கரை வீதிக்கு அருகே நேற்றுக்காலை சுமார் 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிலாம் கடற்கரை வீதியிலுள்ள பொலிஸ் அத்தியட்சகரினதும், சிலாபம் நீதிவானினதும் உத்தியோக இல்லத்திற்கருகே மீனவர்கள் முன்னேறி வர முடியாதவாறு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரை சிலாபம் கடற்கரை வீதி மீன் சந்தை என்பன வெறிச்சேடிக்கிடந்தன.
பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பையும் மீறி கற்களால் தாக்கியவாறு முன்னேற்றிச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிவானின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் வளவுக்குள் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து கொளுத்தினர். பாதுகாப்பு உத்தியோகத்தரும் தாக்கப்பட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கலகம் அடக்கும் பொலிஸாரும் ஸ்தலத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன.
கலகக்காரர்களை பின்வாங்கச் செய்வதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் செய்தனர். கலகக்காரர்களுக்கும் பாதுகாப்புப் பிரிவினருக்குமிடையே பலத்த வாக்குவாதங்கள் இடம்பெற்றன. கலகக்காரர்கள் பாதுகாப்புப் பிரிவினரிடமிருந்த துப்பாக்கியை பறிக்க முற்பட்ட வேளையிலேயே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக சிலர் தெரிவித்தனர்.
எனினும் துப்பாக்கிப் பிரயோகம் எவ்வாறு இடம்பெற்றது என்பது பற்றிய தீவிர விசாரணைகளில் சிலாபம் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற நமது புத்தளம் மாவட்ட குறூப் நிருபரும் சிறு காயங்களுக்குள்ளானார். கலகத்தை அடக்குவதற்காக பொலிஸார் வீசிய கண்ணீர்ப்புகைக் குண்டொன்றை எடுத்து பொலிஸாரை நோக்கி வீச முற்பட்ட ஒருவரின் கையிலேயே புகைக்குண்டு வெடித்ததில் வலது கையில் பலத்த காயங்களுக்குள்ளானார்.
சிலாபம் மஹாவெல்ல என்றழைக்கப்படும் கடற்கரை பிரதேசத்தைச் சேர்ந்த வர்ணகுலசூரிய எண்டனி பெர்ணான்டோ (வயது 38) என்ற நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமாகியுள்ளார்.
நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் சிலாபம் நகர சபைத் தலைவர் ஹிலரி பிரசன்ன, கடற்கரை தேவாலயத்தின் பங்குத்தந்தை மற்றும் சிலாபம் பேராலய பங்குத்தந்தை ஆகியோர் கடற்றொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
அரசு கடற்றொழிலாளர்களுக்கு மானியம் வழங்குவதை மீனவர்கள் விரும்பவில்லை. மானியம் என்பதற்கு சிறிதும் தாம் இணங்கப் போவதில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
எனினும் சிலாபம் கடற்றொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக நேற்று மாலை 6.00 மணியளவில் சிலாபம் மறை மாவட்ட பேராயர் அதிவணக்கத்துக்குரிய வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை சிலாபம் கடற்றொழிலாளர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளதையடுத்து சிலாபத்தில் ஒரு பதற்ற நிலை உருவாக்கியுள்ளது.
»»  (மேலும்)

2/15/2012

| |

கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு புதிய உபவேந்தர்

கிழக்கு பல்கலைக்கழத்தின் எட்டாவது உப வேந்தராக கனடாவிலுள்ள கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனம் தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவினால் கிழக்கு பல்கலைக்கழ நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் உப வேந்தராக கடமையாற்றிய கலாநிதி என்.பத்மநாதன் 2010ஆம் ஆண்டு நடு பகுதியில் எதிர்நோக்கிய நெருக்கடி நிலையொன்றின் காரணமாக பதவி விலகியதிலிருந்து குறித்த பதவி வெற்றிடம் காணப்பட்டது.
இந்நிலையில்இ குறித்த பதவிக்கு கிழக்கு பல்கலைக்கழக பேரவையினால் பேராதனை பல்கலைக்கழக மருத்துவ துறை பேராசிரியர் ஆர்.சிவக்கநேசன்இ கிழக்கு பல்கலைக்கழக விவசாய பீட பீடாதிபதி எஸ்.சுதர்சன்இ கனடாவில் வசிக்கும் கலாநிதி கிட்ணன் கொபிந்தராசா ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தன.
இதனையடுத்தே கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா கிழக்கு பல்கலைக்கழத்தின் எட்டாவது உப வேந்தராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கணித துறையில் கலாநிதி பட்டம் பெற்ற இவர்இ 1993ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரையிலான கால பகுதியில் கிழக்கு பல்கலைக்கழத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
கிழக்கில் நிலவிய அசாதாரன சூழ்நிலை காரணமாக 2004ஆம் ஆண்டு  நாட்டை விட்டு வெளியேறியஇ இவர் தற்போது கனடாவிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் பகுதி நேர பேராசிரியராக பணியாற்றுகின்றார்.
»»  (மேலும்)

2/14/2012

| |

கிழக்கு மாகாண சபையின் அமர்வு 28ம் திகதி ஒத்தி வைப்பு.

கிழக்கு மாகாணசபையின் இம்மாதத்திற்கான சபை அமர்வு இன்று (13.02.2012) சபை தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் தலமையில் இடம் பெற்றது. இடம்பெற்ற அமர்வின் போது நாடு, நகர திட்டமிடல் சட்டமூலம் சபை உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய சபை தவிசாளரினால் எததிர்வரும் 28ம் திகதி ஒத்தி வைக்கப்பட்டது.
இவ் அமர்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர்கள்,  மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

»»  (மேலும்)

| |

கனேடிய தூதரக அரசியல் துறை செயலாளர் கிழக்கு மாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடல்.

கனேடிய தூதரக அரசியல் துறை செயலாளர் நேகன் பெஸ்டர் மற்றும் அரசியல் விவகார அலுவலகர் ஆகியோர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுடன் முதல்வரின் திருமலை அலுவலகத்தில்  சந்தித்து கலந்துரையாடினார்கள். இச் சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தின் சமகால அரசியல் நிலவரம் தொடர்பாகவும், அபிவிருத்தி நடவடிக்கை தொடர்பாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சரினால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
அத்துடன் கனேடிய அரசாங்கத்தின் நிதி உதவி கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி திட்டத்தில் கிழக்கு மாகாணசபையின் பங்களிப்போடு உறுதி செய்யப்படும் எனவும் கனேடிய அதிகாரியினால் உறுதியளிக்கப்பட்டது. கிழக்கு மாகாண முதலமைச்சரின் அரசியல் நடவடிக்கையை உண்ணிப்பாக அவதானிப்பதாகவும், கிழக்கு முதல்வரின் மக்கள் சார்ந்த நடவடிக்கையை தாம் அவதானிப்பதாகவும் கனேடிய தூதரக அரசியல் துறை செயலாளர் தெரிவித்தார்.
»»  (மேலும்)

| |

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் ஆலயத்திற்கு மேளவாத்தியக் கருவிகள் அன்பளிப்பு

தமிழ் மக்கள விடுதலைப் புலிகள் கட்சியினால் ஆலயங்களுக்கான பல்வேறு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையிவேல கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பறங்கியாமடு கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்திற்கு மின்சாரத்தில் இயங்கும் மேள வாத்தியக் கருவிகள் வழங்கி வைக்கபட்டுள்ளன. இந் நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் உதயஜீவதாஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய பொருளாhள் திருநாவுக்கரசு, பறங்கியாமடு வித்தியாலயத்தின் அதிபர் தியாகராஜா ஆலய நிருவாக சபையினர் மற்றும் கிராமமக்களும் கலந்து கொண்டார்கள்.
»»  (மேலும்)

2/13/2012

| |

இந்திய அரசின் நிதி உதவி திட்டத்தில் கிழக்கு மாகாணத்திற்கு நாலாயிரம் வீடுகள்

இந்திய அரசின் நிதி உதவித்திட்டத்தின் கீழ் கிழக்கு மற்றம் வட மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கபட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்திற்கென 4ஆயிரம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று(11.02.2012) இந்திய உயர்ஸ்தானிகருக்கும் முதலமைச்சருக்குமிடையில் இது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே இந்த 4ஆயிரம் வீடுகளும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதில் 3ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான நிதியினை நேரடியாக பயனாளிகளிடம் ஒப்படைத்து அவர்களினால் குறித்த வீடகள் நிர்மாணிக்கப்படும் எனவும் ஏனைய 1000வீடுகளையும் இந்திய அரசு நிர்மானித்து கொடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலா ஓவ்வொரு வீடும் இலங்கை ரூபாயில் 550000; பெறுமதி வாய்ந்ததாகும்.
இதனை கண்காணிப்பதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான கிழக்கு மாகாண சபை ஒரு கட்டுப்பாட்டுக் குழுவினை நியமித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதற்கான முதற்கட்ட பூர்வாங்க வேலைகள் தற்போது இடம்பெற்று முடிந்துள்ள நிலையில் மார்ச் மாதத்தின் முதல்வாரத்தில் இப் பணிகள் முழுமையாக ஆரம்பமாகும் எனவும் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார். இவ்வாறாக கிழக்கு மாகாணத்திற்கு குறித்த எண்ணிக்கையிலான வீடுகளை தந்துதவிய இந்திய அரசிற்கு தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய அரசின் உதவிதிதட்டத்தில் மொத்தமாக 49000ஆயிரம் வீடுகள் இலங்கைகக்கு வழங்கப்படவுள்ளன. இதில் மலையகம் கிழக்கு மாகாணங்களுக்கு தலா 4000ஆயிரம் வீடுகளும் ஏனையவை வட மாகாணத்திற்கும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. முழுமையாக பொருளாதார அமைச்சு இதனை மேற்பார்வை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

| |

நாடு நகரத்திட்டமிடல் திருத்தச் சட்டமூலம் தற்போது அவசியமற்றதொன்றாகும் – கிழக்கு மாகாண முதலமைச்சர்



தற்போது மாகாண சபைகளின் ஒப்புதல்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ள நாடு மற்றும் நகரதிட்டமிடல் திருத்தச் சட்மூலத்தில் சிறுபான்மை மக்களை பாதிக்கின்ற வகையில் பல சரத்துக்கள் உள்ளதனால் சிறுபான்மை மக்களின் அதிகாரங்களைப் பேசிப் பெறுகின்ற மாகாண சபையாக திகழ்கின்ற கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் அதில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரியுள்ள நிலையில் உண்மையிலே தற்போதைய நிலையில் குறித்த சட்ட மூலமானது தற்போது அவசியமற்றதொன்றாக தாம் கருதவதாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று(11.02.2012) பொருளாதார அபிவிருத்தி  அமைச்சர் பசில் ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர்களுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான கிழக்கு மாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்குமிடையில் இது தொடபர்பிலான முக்கிய சந்திப்பொன்று பொருளாதார அமைச்சில் இடம் பெற்றுள்ளது.
அதன் போது கிழக்கு மாகாண சபைக்கு நாளை கொண்டுவரப்பட இருந்த குறித்த திருத்தச் சட்டமூலம் தொடர்பாக விவாதித்து, அதன் பின்னர் குறிப்பிட்ட மாற்றங்களைச் செய்யவேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இக் கலந்துரையாடலில் அமைச்சர் பசில் ராஜாக்ஸ தலைமையிலான குழுவில் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே, புத்தசாசன அமைச்சின் செயலாளர், காணி அமைச்சின் செயலாளர், நகர அபிவிருத்தி அமசை;சின் செயலாளர்ஆகியோரும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவில் மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வே, கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, விவசாய அமைச்சர் து.நவரெட்ணராஜா, சுகாதரா அமைச்சர் எம்.எஸ்.சுபைர்,கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ், பிரதி தவிசாளர் ஆரியவதிகலபதி, மாகாணசபை உறுப்பினர்களான எஸ்.புஸ்பராஜா, பூ.பிரசாந்தன்,பரீட், பிரேமகுமார ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
»»  (மேலும்)

| |

சம்பூர் மக்களுடன் கிழக்கு முதல்வர் மீள்குடியேற்றம் தொடர்பாக கலந்துரையாடல்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள சம்பூர் மக்கள் தற்போதும் முகம்களிலே வாழந்து வருகின்றார்கள். இன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும்  கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன் அவர்கள் முகாம்களின் உள்ள மக்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களது தேவைகள் குறித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
திருஃ கிளிவெட்டி மகா விதியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையடலின் முகாம்களுக்கு பொறுப்பான தலைவர்களும் முக்கிய பிரதி நிதிகளும் கலந்து கொண்டார்கள். முகாம்களிலுள்ள மக்களது உடனடித் வைகள் மற்றும் அவர்களது மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரம் தொடர்பில் தாம் கவனம் எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் உரியவர்களோடு தாம் கலந்து ஆலொசித்து தீர்க்கமான ஓர் முடிவினை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்,.
»»  (மேலும்)

2/11/2012

| |

உலக பொருளாதாரத்தினை ஆசியமயமாக்க ஈரான் நடவடிக்கை உலக பொருளாதாரத்தினை ஆசியமயமாக்க ஈரான் நடவடிக்கை

  • அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் தடை ஈரானை பாதிக்காது;
  • சீனா, இந்தியாவின் ஆதரவுக்கு நன்றி
- ஈரான் தூதுவர்
மேற்கு நாடுகளையும் அமெரிக்காவையும் மையமாகக் கொண்டு இயங்கும் உலகின் பொருளாதாரத்தை ஆசியமயமாக்குவதற்கு ஈரான் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் ஐரோப்பாவில் பெரும் பொருளாதார நெருக்கடி உருவாகும் என்று இலங்கையில் உள்ள புதிய ஈரானியத்தூதுவர் மொஹமத் உஷானி பெளர் தெரிவித்துள்ளார்.
ஈரான் தொடர்ந்தும் இலங்கைத் தேயிலையை வாங்குமென்றும் அத்துடன் இலங்கை உடனான தனது நட்புறவை எதிர்காலத்தில் மேலும் ஈரான் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஊடகவியலாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போதே ஈரானியத்தூதுவர் மொஹமத் உஷானி பெளர், இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்;
அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் விதித்துள்ள தடையினால் இலங்கைக்கான ஈரான் நாட்டின் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட மாட்டாது. தொடர்ந்தும் ஈரான் மசகு எண்¦ணையை இலங்கைக்கு வழங்கும்.
மேற்குலக நாடுகளை விட வளர்முக நாடுகளுடன் நட்புறவை வைத்திருப்பது பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது நல்லதென்று ஈரான் உணர்ந்திருக்கிறது.
ஈரானிலிருந்து பிறநாடுகள் பொருட்களை வாங்குவதற்கு பொருளாதார கஷ்டங்களை எதிர்நோக்கியிருந்தால், பொருட்களை பண்டமாற்று முறையில் அந்த நாடுகளுக்கு வழங்க ஈரான் தயாராக இருக்கின்றது.
ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற நட்பு நாடுகள் எமது நாட்டிலிருந்து எண்ணெயை வாங்குவதன் மூலம் எமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு உதவி செய்கின்றன.
மேற்கு நடுகளும், அமெரிக்காவும் ஒருதலைப்பட்சமாக ஈரான் மீது விதித்த தடைகளை சீனாவும் இந்தியாவும் ஆதரிக்கவில்லை. இதற்காக அவ்விரு நாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும் ஈரானின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 7 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. ஆசியாவில் ஈரான் வலுவான பொருளாதாரத்தைக் கொண்டிருப்பதனால் ஆசியாவின் எரிசக்தி சந்தை வலுவடைந்து ஆசிய நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சியடையும்.
ஐரோப்பிய யூனியன் நாடுகளும் அமெரிக்காவும் ஈரான் மீது விதித்துள்ள தடைகள் தமது நாட்டிற்கு சிறிதளவேனும் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை. வறிய நாடுகளின் பொருளாதாரம் வலுவற்று இருக்கின்ற காரணத்தினால் இந்த தடைகளினால் வறிய நாடுகளே பாதிக்கப்படும்.
குறிப்பாக உலகில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதால் இந்த சிறிய நாடுகளின் பொருளாதாரம் பெரும் பாதிப்பிற்குள்ளாகும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
»»  (மேலும்)

2/10/2012

| |

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்து வாஹிட்டுடன் ஜனாதிபதி மஹிந்த உரையாடல்

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நiட், தற்போதைய ஜனாதிபதி மொஹமட் வாஹித் ஆகியோருடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
மாலைதீவில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் மாற்றம், அதனைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்டிருக்கின்ற பதற்ற நிலை தொடர்பாக ஜனாதிபதி இருவருடனும் பேசியதாக ஜனாதிபதியின் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்தார்.
நேற்றுக்காலை புதிய ஜனாதிபதி மொஹமட் வாஹித்துடன் தொடர்பு கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நiட்டின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
இதேவேளை நேற்று நண்பகலளவில் முன்னாள் ஜனாதிபதி நiட்டுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர், அவரது பாதுகாப்பு குறித்துக் கேட்டறிந்து கொண்டார். இதேவேளை மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நiட்டின் மனைவியும் இரண்டு குழந்தைகளும் பாதுகாப்புக் கருதி இலங்கை வந்துள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்தார்.
இதற்கிடையில், இலங்கை வந்துள்ள நiட்டின் குடும்பத்தினருக்கு போதிய பாதுகாப்பை வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோனைப் பணித்துள்ளார்.மாலைதீவு முழுவதும் கலவரம் பரவிவரும் நிலையில் பதவி விலகிய அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நiட்டுக்கு எதிராக குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. என்றாலும் அவர் கைது செய்யப்படமாட்டாரென புதிய ஜனாதிபதியின் பேச்சாளர் கூறினார்.
எனினும் எந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது என்பது தெரியவில்லை என நiட்டின் மாலைத்தீவு ஜனநாயக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நான் நாளை சிறைப்படுத்தப்படுவேன் என மொஹமட் நiட் கூறியுள்ளார்.
ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய மொஹமட் நiட் ஆதரவாளர்கள் நேற்று நாடு பூராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கலவரம் பரவி வரும் நிலையிலேயே நiட் மீது நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
முன்னதாக தான் துப்பாக்கி முனையில் பதவி விலக்கப்பட்டேன் என மொஹமட் நiட் நேற்று முன்தினம் தமது ஆதரவாளர்களுக்கு மத்தியில் குறிப்பிட்டார். இந்நிலையில் நேற்றைய தினத்தில் அந்நாட்டின் பல தீவுகளிலும் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவாக கலவரம் வெடித்தது.
எனினும், அமைதியான ஊர்வலத்தின் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக மாலைதீவு ஜனநாயகக் கட்சி குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை அடிப்படையில் ஒடுக்கப்படும் என மாலைதீவு பொலிஸார் நேற்று முன்தினம் இரவு அறிவித்திருந்தது.
எனினும் மாலைதீவின் பிரதான தீவான தலைநகர் மாலேயில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் ஒரு சில மணி நேரங்களில் ஏனைய தீவுகளுக்கும் பரவியது. இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மொஹமட் நiட் மீதும் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஒரு சில பொலிஸ் நிலையங்களும் தாக்கப்பட்டதாக பொலிஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. நாட்டின் பிரதான தீவுகளில் ஒன்றான அத்துவில் 300 இராணுவத்தினரும் ஆயுதம் தரித்த பொலிஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக 7 தீவுகளில் நேற்றைய தினத்தில் கலவரம் வெடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மொஹமட் நiட்டுக்கு அந்நாட்டின் குற்றவியல் நீதிமன்றம் நேற்று பிற்பகல் பிடியாணை பிறப்பித்துள்ளது. எனினும் எந்த குற்றத்திற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை. ஆனால், நiட் மீது 14 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் தமக்கு விபரம் கிடைக்கவில்லை என்றும் மாலைதீவு ஜனநாயக கட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது-
இந்நிலையில் நேற்று மாலை நiட் அவரது வீட்டில் இருந்தவாறு ஊடகங்களுக்கு கூறியதாவது, வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்கும் முன்னாள் ஜனாதிபதியாக சிறைப்படுத்தப்படவிருக்கிறேன் என குறிப்பிட்டார்.
மாலைதீவில் என்ன நிகழ்கிறது என்பதை சர்வதேச சமூகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலவரம் குறித்து சர்வதேச சமூகம் உடன் நடவடிக்கை எடுக்கும் என நான் நம்புகிறேன். நாளை (இன்று) சிறைப்படுத்தப்பட்டு விடுவேன் என்று நiட் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இதேவேளை மாலைதீவில் பரவிவரும் கலவரத்தை கட்டுப்படுத்த அமைச்சரவையை அமைக்கும் முயற்சியில் புதிய ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார். குறிப்பாக ஓய்வுபெற்ற கலோனல் முகமது நkமை பாதுகாப்புத் துறை அமைச்சராக புதிய ஜனாதிபதி மொஹமட் வாஹிட் அஹமட் நியமித்துள்ளார். அத்துடன் உள்துறை அமைச்சராக வழக்கறிஞர் முஹமது ஜமீல் அஹமத் நியமிக்கப்பட்டுள்ளார்.
கூட்டு அமைச்சரவையை நியமிக்க கால அவகாசம் தேவைப்படும் என்பதால் கலவரத்தை அடக்குவதற்காக 2 அமைச்சர்கள் மட்டும் அவசரமாக நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அசாதாரண அரசியல் சூழ்நிலை நிலவிவரும் மாலைதீவுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை இணைச் செயலாளர் ரொபட் பிளேக் விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் விக்டோரியா நியூலான்ட் தெரிவித்துள்ளார். வொஷிங்டன் பத்திரிகையாளர் சந்திப்பில் நியூலான்ட் கூறியதாவது, துப்பாக்கி முனையில் மொஹமட் நiட் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்திருப்பது சர்வதேச நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ரொபர்ட் பிளேக் மாலைதீவு செல்லவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த பயணத்தில் மாலைத்தீவு புதிய ஜனாதிபதி மொஹமட் வாஹிட்டுடன் பிளேக் தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
இதேபோன்று இந்த விவகாரம் குறித்து கவனத்துடன் இருப்பதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உயர்ஸ்தானிகர் ஜோன் ஹன்கின் குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி நiட் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தகவல் எமக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில் அவர் கைது செய்யப்படும் பட்சத்தில் அவருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் நாம் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறோம் என்று அவர் ராய்ட்டருக்கு தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த நிலவரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா. விசேட தூதுக் குழு அடுத்தவாரம் மாலைதீவு செல்லும் என ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அறிவித்துள்ளார்.
»»  (மேலும்)

| |

ஜனாதிபதி மஹிந்தவுக்கு இந்தியாவின் அதியுயர் விருது வழங்க வேண்டும்

இந்தியாவின் அதி உயர் சிவிலியன் விருதான “பாரத ரத்னா” விருதை எல்.ரி.ரி.ஈ.யை துவம்சம் செய்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க வேண்டுமென இந்திய ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமி கேட்டுள்ளார்.
எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளை இலங்கை மண்ணில் அழித்து ஒழித்த இந்த சாதனை வீரர் மஹிந்த ராஜபக்ஷ, இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த எல்.ரி.ரி.ஈ.யை துவம்சம் செய்ததனால், அவருக்கு இந்திய அரசாங்கமும், மக்களும் நன்றி செலுத்தும் முகமாக பாரத் ரத்னா வழங்க வேண்டுமென்று கூறியுள்ளார்.
எல்.ரி.ரி.ஈ. அழிக்கப்படாமல் இருந்தால் அவ்வியக்கம் தனது இராணுவ, கடற்படைகளை வலுப்படுத்தி இந்தியாவிலும் பிரிவினைவாதத்திற்கு அடித்தளம் அமைப்பதற்கு காரணமாக இருந்திருக்குமென்றும் சுப்ரமணியம் சுவாமி சுட்டிக்காட்டுகிறார்.
கதிர்காமத்திற்கு சென்று முருகப்பெருமானை தரிசித்த பின்னர் டாக்டர் சுப்ரமணியம் சுவாமி இலங்கையிலுள்ள வெளிநாட்டு செய்தி நிருபர்களையும் சந்தித்து உரையாடினார். எல்.ரி.ரி.ஈ. தன்னுடைய பணப்பலத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டுக்கே பெரும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும் வாய்ப்பு அன்று தோன்றியிருந்தது.
இத்தகைய சூழ்நிலையில் எல்.ரி.ரி.ஈ.யை அழித்து இந்தியாவுக்கு உதவியளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பாரத் ரத்னா விருதை வழங்கி கெளரவிப்பது இந்தியாவின் தலையாய கடமையென்று சொன்னார்.
திரு. சுப்ரமணியம் சுவாமி 1991ம் ஆண்டில் பிரதம மந்திரி பதவியில் இருந்த சந்திரசேகர் அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருந்திருக்கிறார். இந்திய மத்திய அரசாங்கம் தமிழ்நாடு கொண்டு வரும் அழுத்தங்களை கொண்டுவராமல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டுமெனவும் அவர் சொன்னார்.
இன்று இலங்கை வாழ் தமிழர்கள் அமைதியாகவும் அச்சுறுத்தல் இன்றி மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். அவர்கள் இப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது மிகவும் நம்பிக் கை வைத்திருக்கிறார்கள்.
எனவே, ஜனாதிபதி கொண்டு வரும் சமாதான முயற்சிகளுக்கு இலங்கைத் தமிழர்கள் தங்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கு வார்கள் என்று தமக்கு நம்பிக்கை இருக்கிறதென்று டாக்டர் சுப்ரமணியம் சுவாமி மேலும் தெரிவித்தார்.
»»  (மேலும்)

| |

வாகனேரி கோகுலம் வித்தியாலயத்தின் புதிய 2மாடிக்கட்டடம் கிழக்கு முதல்வரினால் அங்குரார்ப்பணம். வாகனேரி கோகுலம் வித்தியாலயத்தின் புதிய 2மாடிக்கட்டடம் கிழக்கு முதல்வரினால் அங்குரார்ப்பணம்.

 வாகனேரி கோகுலம் வித்தியாலயத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் வளங்கப்பட்ட 2 மாடிக்கட்டட திறப்பு விழா இன்று (09.02.2012) பாடசாலையின் அதிபர் பாலச்சந்திரன் தலமையில் இடம்பெற்றது. இக் கட்டடத்தை பிரதம அதிதியாக கலந்து கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் திறந்து வைத்தார்.  பாடசாலையின் அதிபரினால் அதிதிகளுக்கு நினைவுச்சின்னம்  வளங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வுக்கு அதிதிகளாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி, கல்குடா வலையக்கல்வி பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி, கோட்டக்கல்வி அதிகாரி குணலிங்கம், முதலமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி அ.செல்வேந்திரன், பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
»»  (மேலும்)

| |

வாழைச்சேனை, திகிலிவெட்டை கிராம சேவகர் பிரிவிற்கு மின் விநியோகம்

ஜனாதிபதியின் கிராமங்கள் தோரும் மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் வாழைச்சேனை திகிலிவெட்டை கிராம சேவகர் பிரிற்கான மின் விநியோகம் இன்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ரீ.உதயஜீவதாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், மின்சார சபையின் வாழைச்சேனை பிரதேச பொறுப்பதிகாரி என்.சோதிராஜா, வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு தேசநிர்மான அமைச்சின் எழுபத்தெட்டு இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இம் மின்விநியோகத் திட்டம் இன்று மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
இம்மின் விநியோகத்தின் மூலம் திகிலிவெட்டை, குளத்து வெட்டை, வாத்தியார்ரகல், வகுனகுடா, நாவலம் பட்டி ஆகிய கிராம மக்கள் நன்மை பெறவுள்ளதாக வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் உதயஜீவதாஸ் தெரிவித்தார்.
»»  (மேலும்)

2/09/2012

| |

நாடு, நகர அபிவிருத்தி சட்டமூலம் தொடர்பான விசேட கலந்துரையாடல்.

நாடு நகர திட்டமிடல் திருத்தச் சட்டமூலம் தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் எதிர்வரும் 13ம் திகதி கொண்டுவரப்படவுள்ள காலநிலையில் இன்று கிழக்கு மாகாண சபாநாயகர் எச்.எம்.எம்.பாயிஸ் தலமையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பங்குபற்றுதலுடன் மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.  இதில் கிழக்கு மாகாண சட்டமூலம் தொடர்பாக  ஆராய்வுக்குழு எதிர்வரும் 13ம் திகதி நாடு, நகர திட்டமிடல் தொடர்பாக கிழக்கு மாகாண மக்களுக்கு எவ்வாறான பாதிப்புக்கள் பாதகமாக அமையுமா? சாதகமாக அமையுமா? என்பது தொடர்பாக ஆராய்ந்து உரிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். பாதகமாக அமையுமிடத்து எவ்வாறான திருத்தம் இடம்பெற வேண்டும் என்ற முன்மொழிவுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
நாடு, நகர திட்டமிடல் சட்டமூலம் தொடர்பாக பல்வேறுபட்ட கருத்துக்கள் கட்சியின் தலைவர்களினாலும், உறுப்பினர்களாலும் முன்வைக்கப்பட்டு வருகின்ற வேளையில் கிழக்கு மாகாணசபையின் அபிப்பிராயத்துக்காக மத்திய அரசினால் முன்வைக்கப்பட்ட பிரேரனை தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் அங்கம் வகிக்கும் கட்சிககளினால் திருத்தம் முன்வைக்கப்பட வேண்டும் என்பதிலும் இந்த சட்டமூலத்தினால் கிழக்கு மாகாண மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதிலும் கண்னும் கருத்துமாக செயற்பட வேண்டும் என்றும் கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சர்களான உதுமாலெவ்பை, விமலவீர திஸாநாயக்க, து.நவரெட்னராஐh, மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

»»  (மேலும்)

| |

'எல்.ரி.ரி.ஈ.யினரின் இறுதிக்கட்ட கொடுமைகள்' பாதுகாப்பு அமைச்சினால் டி.வி.டி. வெளியீடு

வன்னியில் இடம் பெற்ற இறுதிக்கட்ட நடவடிக்கைகளின் போது புலிகளால் தமிழ் மக்கள் எதிர்கொண்ட வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அவர் களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை நடவடிக்கைகளை வெளிக்கொணரும் நோக்கில் பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களுடன் கூடிய டி.வி.டி.யொன்றை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.
‘எல்.ரி.ரி.ஈ.யினரின் இறுதிக்கட்ட கொடுமைகள்’ எனும் தலைப்பில் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட இந்த டி.வி.டிகளை தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹ¥லுகல்ல வெளியிட்டுவைத்தார்.
முல்லைத்தீவு மாவட்டம் வலைஞர்மடம் சென் மேரிஸ் தேவாலயத்தில் தஞ்ச மடைந்திருந்த 600 சிறுவர், சிறுமியர்களை எல்.ரி.ரி.ஈ. யினர் பலவந்த மாகப் பிடித்துச்செல்ல மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் தேவாலயத்தின் மீது நடத்திய கொடிய தாக்குதல் சம்பவம் பற்றியும், இச்சம்பவம் குறித்து அத்தேவாலயத்தின் பிரதம அருட்தந்தை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நேரடி சாட்சியங்களும் இந்த டி.வி.டியிலுள்ள வீடியோ காட்சியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
புலம் பெயர்ந்துவாழும் சில தமிழர்கள் மற்றும் சர்வதேச ஊடகங்களால் இலங்கை அரசாங்கத்துக்கும், முப்படையினருக்கும் எதிராக முன்னெடுக்கப்படும் போலியான பிரசாரங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலும், எல்.ரி.ரி.ஈ.யினரின் கொடிய செயல்களை சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டும் நோக்கிலுமே இந்த வீடியோ காட்சி தயாரிக்கப்பட்டிருப்பதாக லக்ஷ்மன் ஹ¥லுகல்ல குறிப்பிட்டார்.
சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டிரு க்கும் இலங்கை தொடர்பான வீடியோ காட்சியில் தோன்றிய உருவங்கள் மற்றும் கருத்துத் தெரிவித்த நபர்கள் குறித்த எந்தவிதமான சரியான தவல்களும் இல்லை. வெறுமனே நிழல்கள் மாத்திரமே காண்பிக்கப்பட்டன.
ஆனால், பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த வீடியோ காட்சியில் தோன்றும் நபர்கள் உண்மையில் கஷ்டங்களை நேரில் கண்டவர்களும், அனுபவித்தவர்களும். அவர்களின் பெயர்கள், வாழும் இடம் என்பனவும் இவ்வீடியோ காட்சியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. தேவையாயின் நேரடியாகச் சென்று அவர்களிடம் உண்மை நிலைமையைக் கேட்டறிந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். இந்த வீடியோக் காட்சியடங்கிய டி.வி.டியை இலங்கைக்கு வரும் அனைத்து வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கும் வழங்கவிருப்பதுடன், சர்வதேச ரீதியில் நடைபெறும் மாநாடுகளில் இலங்கை சார்பில் கலந்துகொள்ளும் பிரதிகளூடாக வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக லக்ஷ்மன் ஹ¥லுகல்ல சுட்டிக்காட்டினார்.
வலைஞர் மடம் சென்மேரிஸ் தேவாலயத்தில் எல்.ரி.ரி.ஈ.யினர் மேற்கொண்ட கொடிய தாக்குதல்கள் மற்றும் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் காயமடைந்த முன்னாள் புலி உறுப்பினர்களைக் கொண்ட பஸ்வண்டிகளை எல்.ரி.ரி.யினர் குண்டுவைத்துத் தகர்த்த சம்பவம் ஆகியவற்றை நேரடியாகக் கண்டவர்களின் சாட்சியங்கள் இந்த டி.வி.டியிலுள்ள வீடியோ காட்சியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தமது தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த சுமார் 600 சிறுவர், சிறுமியர்களைப் பலவந்தமாகப் பிடித்துசெல்வதற்கு எல்.ரி.ரி.ஈ.யினர் முயற்சித்தனர். இதனைத் தடுக்க முயற்சித்தபோதும் ஆயுதங்களுடன் தேவாலயத்துக்குள் நுழைந்து சிறுவர், சிறுமியரைத் தாக்கி சிலரை எல்.ரி.ரி.ஈ.யினர் பலவந்தமாக இழுத்துச் சென்றதாகவும் இந்த டி.வி.டியிலுள்ள வீடியோ காட்சியில் தோன்றிய வலைஞர்மடம் சென்மேரிஸ் தேவாலயத்தின் பிரதம அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
»»  (மேலும்)

2/08/2012

| |

பேரினவாத கடும்போக்கு தொடர்ந்தால் சர்வதேச தலையீடுகளை தவிர்க்க முடியாது-புளொட் தலைவர் சித்தார்த்தன்

பேரினவாத கடும்போக்கு தொடர்ந்தால் சர்வதேச தலையீடுகளை தவிர்க்க முடியாது-புளொட் தலைவர் சித்தார்த்தன்

நாட்டில் பேரினவாத போக்கு தொடருமானால் சர்வதேச நாடுகளின் தலையீடுகளை தவிர்க்க முடியாது என புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு 18 இலட்சம் மேலதிகமான மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. எனவே, அவர் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தடங்கலின்றி தீர்வினை வழங்க முடியும் எனவும் புளொட் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்செய்யப்படக் கூடாதென அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய கூறியிருப்பது தொடர்பாக கருத்துரைக்கும்போதே புளொட் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது சகல தரப்பின் தவறுகளையும் சுட்டிக்காட்டியுள்ளதோடு, அதற்கான பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது. ஜனாதிபதியே நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தார். எனவே அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியது கட்டாயமாகும். எனவே பேரினவாத கடும் போக்காளர்களின் பிடிக்குள் ஜனாதிபதி சிக்கிவிடலாகாது. அவ்வாறு சிக்குவாரானால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சர்வதேசத்தின் உதவியை கோரும்நிலைக்கு தள்ளப்படுவார்கள். இது தவிர்க்க முடியாத தார்மீகக் கட்டாயமாகும். இவ்வாறான சூழ்நிலையில் நாட்டிற்குள் சர்வதேசத்தின் தலையீடுகள் அதிகரிக்கும். அப்போது சர்வதேசம் தலையிடுகிறதே என கூச்சலிடுவதால் பயனில்லை. விசேடமாக ஜனாதிபதிக்கு 18 இலட்சம்  மேலதிகமான மக்களின் ஆதரவும் உள்ளது. மூன்றிலிரண்டு பெரும்பான்மை கொண்ட அரசாங்கமும் உள்ளது. இதனால் தைரியமாக பேரினவாதிகளுக்கு அஞ்சாமல் தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கமுடியும். அதேபோன்று நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த முடியும். பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும்போது விசேடமாக உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோர் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு நஷ்டஈடுகள் நிவாரணங்களை வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும். தொடர்ந்தும் பேரினவாத கடும் போக்காளர்களுக்கு அஞ்சி பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் சமாதானம் தொலைந்து போகும். நாடு அதே இடத்திலேயே இருக்கும். நாடு பொருளாதார அபிவிருத்தியை நோக்கி நகராது என புளொட் தலைவர் சித்தார்த்தன் மேலும் தெரிவித்துள்ளார்.


»»  (மேலும்)

| |

கிழக்கு முதல்வர் உறுகாமத்து கிராம மக்களுடன் அபிவிருத்தி பற்றிய முக்கிய கலந்துரையாடல்

 கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று(05.02.2012) உறுகாமத்து கிராமக்களுடன் அப் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
அப் பிரதேச மக்களின் வேண்டுதலின் பேரில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்த்தர் க.மோகனின் ஏற்பாட்டில் மேற்படி கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மீளக்குடியேறிய மக்கள் தங்களது கிராமத்தின் தேவைகள் மற்றும் தாம் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்கள்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிராமம் என்ற அடிப்படையில் இப் பிரதேசத்திற்கு முன்னுரிமை வழங்கி தாம் தொடர்ந்து அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள இருப்பதாக முதலமைச்சர் சசந்திரகாந்தன் குறிப்பிட்டார். 
»»  (மேலும்)

2/07/2012

| |

திபெத்தில் மேலும் மூன்று புத்த மதத் துறவிகள் தீக்குளிப்பு

திபெத் மீதான சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து நேற்று முன்தினம் மேலும் மூன்று புத்த மதத் துறவிகள் தீக்குளித்தனர். இவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். இருவர் கடுமையான காயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர்.
திபெத் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்தும், இந்தியாவின் இமாசலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் வசித்து வரும், தலாய்லாமா நாடு திரும்பக் கோரியும், கடந்தாண்டு மார்ச் முதல் இதுவரை, 16 புத்த மதத் துறவிகள் தீக்குளித்துள்ளனர்.
ந்நிலையில், சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் செடா பகுதியில், மூன்று துறவிகள் தீக்குளித்தனர். இவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். இருவர், படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் தலைநகர் லண்டனில் இயங்கும் ‘சுதந்திர திபெத்’ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையடுத்து திபெத் தன்னாட்சி கோரி, தீக்குளித்தோரின் எண்ணிக்கை, 19 ஆக அதிகரித்துள்ளது. தொடர் தீக்குளிப்புகளை அடுத்து, சிச்சுவான் மாகாணத்தில் சீனா பாதுகாப்புக் கெடுபிடிகளை அதிகரித்துள்ளது.
»»  (மேலும்)