உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

11/24/2009

| |

கிழக்கு மாகாண மக்களுக்கு மட்டுமன்றி அனைத்து மக்களுக்காகவும்கிழக்கு மாகாண சபை குரல் கொடுக்கும் -பூ.பிரசாந்தன்.


இன மத மொழி பேதங்களைக் கடந்து இலங்கையின் எந்த மூலையில் எப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டாலும் குரல் கொடுக்கும் மாகாண சபை எமது கிழக்கு மாகாண சபையே இதன் பெருமை கிழக்கு மாகாண முதலமைச்சரையும் ஏனைய உறுப்பினர்களையும் சாரும். மேலும் குறிப்பிடுகையில் கிழக்கு மாகாணத்தினை அபிவிருத்திக்கு இட்டுச் செல்ல வேண்டுமானால் எம்மிடம் உள்ள ஏதோ ஒரு துருப்புச் சீட்டு கல்வியே ஆகும். கல்வி கற்ற நல்லொழுக்க சமூகத்தினை உருவாக்குவதற்கு அனைத்து ஆசிரியர்களும் அற்பணிப்புடன் சேவையாற்ற முன்வர வேண்டும். எதிர் கட்சி, ஆளும் கட்சி அமைச்சர், உறுப்பினர் என்ற நோக்கங்களுக்கு அப்பால் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் திறமையான வழிநடத்தலின் மூலம் கோடிக்கணக்கான அபிவிருத்தி திட்டங்களுக்கு மனிதத்துவத்துடன் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்ற பேதங்கள் இல்லாமல் இன ஒற்றுமை கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்றால் கிழக்கு மாகாண சபை சாதித்த பெரும் சாதனையாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் குடும்ப சமூக காரணம் காட்டி கிராமப்புறங்களுக்கு சேவையாற்ற மறுத்து அனைவரும் இடமாற்றம் கோருவதும் கொடுக்க தவறுமிடத்து அரசியல் தலைமைகளையும் அதிகாரிகளையும் சாடுவதும் நியாயமற்றது. மாணவர்களின் எதிர்காலத்தினை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும் எனவும் மக்களின் வரிப்பணத்திலேயே நாம் அனைவரும் ஊதியம் பெறுகின்ற போதும் இதனை உணர்ந்து முன்வந்து உழகை;க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 20.11.2009 அன்று மட்ஃ கல்வியியற் கல்லூரி பயிற்சிகால ஆசிரியர்கள் கிழக்கு மாகாண சபையினை பார்வையிடுவதற்காக விஜயம் செய்தபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இச்சந்திப்பின்போது மாகாண அமைச்சர் உதுமாலெப்பை மற்றும் விரிவுரையாளர் மோகன் உட்பட ஆசிரியர்கள் பலரும்பலரும் கலந்து கொண்டனர்