உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

12/12/2009

| |

இலங்கையில் முன்னாள் சிறார் போராளிகள் 10ஆம் வகுப்பு பரீட்சைக்கு தோற்றம்


சிறார் போராளிகள் (பழைய படம்)
சிறார் போராளிகள் (பழைய படம்)

இலங்கையில் முன்னாள் சிறார் போராளிகள் 10ஆம் வகுப்பு பரீட்சைக்கு தோற்றம்

இலங்கையில் தேசிய மட்டத்தில் இன்று ஆரம்பமாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பத்திரப் பரீட்சைக்கு விடுதலைப்புலிகளின் அமைப்பில் சேர்ந்திருந்ததாகக் கூறப்படும் சரணடைந்த மாணவர்களும் பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இதேவேளை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலும், வவுனியா மாவட்டத்தின் புளியங்குளம், கனகராயன்குளம் ஆகிய பகுதிகளிலும் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களும் இந்தப் பரீட்சைக்குத் தோற்றுகின்றார்கள்.

வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் பரீட்சைக்குத் தோற்றுவதாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வீ.ஆர்.ஏ.ஒஸ்வெல்ட் கூறுகிறார்.

.