உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

7/27/2010

| |

முதலமைச்சர் தலைமையில் வாகரைப்பிரதேசத்தில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.

ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலே இடம்பெற்று வருகின்றது.
இன்று (26.07.2010) கோரளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் மேற்படி பிரதேசத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் விசேடமாக இங்கு ஏற்பட்டிருக்கின்ற அபிவிருத்தி திட்டங்கள் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கின்ற அமைப்புக்கள் மற்றும் மாகாண சபையில் எவ்வாறான அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது. அரசினால் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்கள் அத்தோடு எதிர்வரும் ஆண்டில் வாகரைப்பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட இருக்கின்ற அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
img_1609
img_1617
img_1621