உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

7/23/2010

| |

ஆப்கானிலுள்ள நேட்டோப் படைகளை நான்கு வருடங்களுக்குள் வாபஸ் பெற தீர்மானம் மக்கள் மத்தியில் தலீபான்கள் செல்வாக்கை மழுங்கடிக்கவும் மாநாட்டில் யோசனை

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு இருக்கும் சர்வதேச இராணுவம் 2014ம் ஆண்டு வெளியேறும் என்றும், அதன் பிறகு அந்த நாட்டின் பாதுகாப்பை அந்த நாட்டு அரசாங்கமே ஏற்றுக்கொள்வது என்றும் காபூல் நகரில் நடந்த உலகத் தலைவர்கள் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருந்த பின்லேடனை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்கா கேட்டது. இதற்கு அந்த நாட்டில் ஆட்சி நடத்தி வந்த தலீபான் தலைவர் முல்லா முகமது ஒமர் சம்மதிக்கவில்லை. இதைத் தொடர்ந்து பின்லேடனை பிடிக்கவும், அவரை ஆதரிக்கும் தலீபான்களை ஒடுக்கவும் அந்த நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது