உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

7/17/2010

| |

மாதர் அபிவிருத்திச்சங்க நிலையங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரால் மூன்று இடங்களில் திறந்து வைப்பு.

img_9777
img_9821
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 மாதர் அபிவிருத்திச்சங்க நிலையங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனால் திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சர் என்றவகையில் மேற்படி மாதர் கிராமிய அபிவிருத்தி கட்டிடங்களுக்கான நிதியினை ஒதுக்கீடு செய்திருந்தார். தலா 2மில்லியன் ரூபா பெறுமதியான 3 கட்டிடங்களும் கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி பணிப்பாளர் திரு. கே. அருந்தவராஜா மற்றும் முதலமைச்சரின் செயலாளர் திருமதி நடராஜப்பிள்ளை ஆகியோரின் பங்குபற்றலுடன் மேற்படி கட்டிடங்கள் பாவனைக்காக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.
வாகரையில் மாதர் அபிவிருத்தி சங்க கட்டிட திறப்பின் போது.
ஓட்டமாவடியில் மாதர் அபிவிருத்தி சங்க கட்டிட திறப்பின் போது.
வாழைச்சேனையில் மாதர் அபிவிருத்தி சங்க கட்டிட திறப்பின் போது.
img_9813
img_9840