உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

4/19/2011

| |

சிறைச்சாலைக் கைதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிவைப்பு

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கிழக்கு மகாணசபை முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் அவர்களின் வேண்கோளுக்கிணங்க ஆகிலன் பொளன்டேசன் அனுசரணையுடன் கிழக்குமாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் அவர்களினால் மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று (15.04.2011) ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததது. இந் நிகழ்வில் கிழக்குமாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், அகிலன் பௌண்டசன் பணிப்பாளர் கோபாலக்கிருஸ்ணன், S.V.O. நிறுவனத்தின் V.R. மகேந்திரன், பிரதம சிறைச்சாலை அதிகாரி இந்திரகுமார், பிரதி சிறைச்சாலை அதிகாரி மோகன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.