1/21/2021
| 0 commentaires |
வல்வட்டித்துறை நகராட்சியின் சாதியபாகுபாட்டுக்கு எதிராக பொது நலவழக்கு
| 0 commentaires |
புதிய அதிபர் மற்றம் நம்பிக்கைத்தருகின்றது-வீரமணி
அமெரிக்காவின் 46 ஆவது குடியரசுத் தலைவராக 78 வயது நிரம்பிய ஜோபைடன் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று, நேற்று பதவியேற்றார். அவருடன் ஜனநாயகக் கட்சி சார்பில் குடியரசுத் துணைத் தலைவராக தமிழ்நாட்டுத் தொடர்புள்ள - கருப்பின மக்களுக்கான போராளி முற்போக்கு சிந்தனையுள்ள சட்ட நிபுணர் திருமதி கமலா ஹாரிஸ் அவர்களும் துணை தலைவராக பதவியேற்றார்!
1/15/2021
| 0 commentaires |
சமூக அநீதி குறித்த நிபுணர் குழு
| 0 commentaires |
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது - மத்திய அரசு
டெல்லியில் போராடி வரும் விவசாய அமைப்பு பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய 9-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேவேளையில் திருத்தங்கள் கொண்டு வரத் தயார், ஆனால் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துவிட்டது.
இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏற்கனவே 8 கட்ட பேச்சுவார்த்தையில் முக்கியமான பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படவில்லை. இந்த நிலையில் இன்று 9-ம் கட்ட பேச்சுவார்த்தை மத்திய அரசுக்கும் - விவசாயிகள் சங்கங்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை சுமார் 5 மணி நேரம் நீடித்தது. இறுதியில் மத்திய அரசு நடத்திய 9-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது
3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் 51 நாட்களாக போராடி வருகின்றனர். மேலும், 10-ம் கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| 0 commentaires |
பொங்கலன்று ஏறாவூரில் புடவைக் கடைகளுக்கு சீல்
கொரோனா வைரஸ் தடுப்புச் செயலணியால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை அனுசரிக்காமல், புடவைக் கடைகளுக்குள் வியாபாரம் மேற்கொண்டமைக்காக 6 புடவைக் கடைகளுக்கு, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவினர் சீல் வைத்துள்ளனர்.
கொரோனா தவிர்ப்பு செயலணிக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களின்படி, கட்ந்த திங்கட்கிழமை (11) முதல் இன்று (14) வரை பலசரக்குக் கடைகள், புத்தக நிலையங்கள், எரிபொருள் நிரப்பு நிலையம், மருந்தகங்கள், சிகையலங்கார நிலையங்கள், அத்தியவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகள் அனைத்தும் மூடப்படுதல் வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
இந்த அறிவித்தலை மீறி, சில புடவைக் கடைகளுக்கு உள்ளே தைப்பொங்கல் உடுதுணிகள் வியாபாரம் இடம்பெற்றாலேயே தாம் இவ்வாறு கடைகளுக்குச் சீல் வைத்ததாக பொதுச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
அரசாங்க இலச்சினையுடன் கடைகளில் ஒட்டப்பட்டுள்ள அந்த அறிவித்தலில் தனிமைப்படுத்தப்பட்ட வர்த்தக நிலையம் கண்காணிக்கப்படுகின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இங்கு வெளியாட்கள் எவரும் உட்செல்ல வேண்டாம். குறிப்பிடப்பட்ட 12.01.2021 தொடக்கம் 25.01.2021 வரை இக்காலப் பகுதியினுள் வழங்கப்பட்ட அறிவுரைகளை மீறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவீர்கள் என்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஏறாவூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
1/13/2021
| 0 commentaires |
ஜோசேப் பரராஜசிங்கம் கொலைவழக்கு--நாளை இறுதி தீர்ப்பு
1/12/2021
| 0 commentaires |
திகிலிவெட்டை பாலத்தினை நிர்மாணித்தல்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படியான திகிலிவெட்டை பாலத்தினை நிர்மாணித்தல் தொடர்பான இரண்டாம் கட்ட ஆய்வுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினல் இன்று இடம்பெற்றது. எதிர் வருகின்ற ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் அதனடிப்படையில்
1/07/2021
| 0 commentaires |
கஜேந்திரர்களின் தெருச்சண்டை அரசியல்
முன்னணி, ‘கஜேந்திரர்கள் அணி எதிர் மணிவண்ணன் அணி’ என்கிற செங்குத்துப் பிளவை இன்று சந்தித்து நிற்கின்றது. யாழ். மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபைகளில் மணி ஆதரவு அணி, கஜேந்திரர்களின் நிலைப்பாடுகளுக்கு எதிராக நின்று பெற்றிருக்கின்ற வெற்றி அதற்கான அண்மைய சான்று.
1/06/2021
| 0 commentaires |
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இருதயவியல் உபகரணங்கள் கிடைத்தன
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதயவியல் பிரிவின் ஆய்வகத்திற்கு (Cardiology Unit - Cardiac Catheterization Laboratory) வழங்கப்படவிருந்த வைத்திய இயந்திர உபகரணங்கள் வேறு மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளதாக அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அதிரடி நடவடிக்கையால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.