வெருகல் படுகொலையின் 17வது ஆண்டு நினைவேந்தல் இன்று மட்டக்களப்பு மாநகரின் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வை மட்/சமூக மேம்பாட்டு நிறுவனங்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.
4/09/2021
| 0 commentaires |
சமூக நிறுவனங்களின் ஏற்பாட்டில் வெருகல் படுகொலை நினைவு தினம்
வெருகல் படுகொலையின் 17வது ஆண்டு நினைவேந்தல் இன்று மட்டக்களப்பு மாநகரின் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வை மட்/சமூக மேம்பாட்டு நிறுவனங்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.
4/05/2021
| 0 commentaires |
பிரம்படி தீவிலிருந்து தொடங்கும் நூறு நூலகங்கள்
4/04/2021
| 0 commentaires |
கிழக்கு பிளவும் வெருகல் படுகொலையும் விட்டுச் சென்றவை
| 0 commentaires |
களுதாவளை பிரதேச சபைக்கு கடன் கொடுத்த காத்தான்குடி
கடந்த 16.03.2021 அன்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் களுதாவளை பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பல கோரிக்கைகளை பாராளுமன்ற உறுப்பினரிடம் முன்வைத்தார்.
4/03/2021
| 0 commentaires |
வாகரையில் மாபெரும் நிலக்கடலை பதனிடும் நிலையம்
3/30/2021
| 0 commentaires |
கந்தன் கருணை படுகொலை நினைவு தினம்
3/27/2021
| 0 commentaires |
முத்தமிழ் வித்தகர் விபுலாநந்தர் பிறந்த தினம்
3/25/2021
| 0 commentaires |
தாயகம் குருசேவின் மூன்று நூல்கள் வெளியீடு.
தாயகம் குருசேவ் அவர்களின் 3 நூல்கள் வெளியிடப்பட இருப்பதாக அறிகிறேன் . தோழர் குருசேவின் உன்னத எழுத்துக்களின் காலம் இருண்டது. ஆர்வமூட்டிய நம்பிக்கையூட்டிய மனிதர்களில் ஒருவர். எல்லாரும் போனாப்போல நானும் போறேன் சாமி மலை என்ற ஏஈ மனோகரனின் பாடல் வரிக்கேற்ப எழுதும் கும்பல்கள் பல பரவலாக உலகளாவிய அளவில் தமிழ் பாசிசத்திற்கு அடியழித்து திரிந்த காலம்.
3/24/2021
| 0 commentaires |
ஜெனிவா ஒரு காகித துப்பாக்கி
3/12/2021
| 0 commentaires |
கிழக்கு மாகாணசபை தேர்தல்_ ஜனாதிபதி_ பிள்ளையான் உரையாடல்
3/08/2021
| 0 commentaires |
மட்டக்களப்பில் சர்வதேச பெண்கள் தினம்
3/06/2021
| 0 commentaires |
"உங்களுக்கு ஒரு வீடு" மண்முனை பிரதேசத்தில் ஆரம்பம்
இடம்பெற்றது.
3/03/2021
| 0 commentaires |
கராத்தே வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைத்தார் சந்திரகாந்தன்
3/01/2021
| 0 commentaires |
ரி எம் வி பி அணி பத்து தமிழரசுக் கட்சி அணி 5
| 0 commentaires |
என்னை கலைக்க முயன்றார்கள் நான் கட்சியைக் கலைத்து விட்டேன்
நுவரெலியா – தலவாக்கலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதியுடன் தொழிலாளர் தேசிய முன்னணி முடிவடைந்துள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிலிருந்து எம்.எஸ்.செல்லசாமி விலகிச் சென்ற சந்தர்ப்பத்தில், தொழிலாளர் தேசிய சங்கத்தில், மயில் சின்னத்திலேயே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிட்டது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சூழ்ச்சி காரணமாகவே தொழிலாளர் தேசிய சங்கத்தின் மயில் சின்னம் இல்லாது செய்யப்பட்டது. இந்தப் பின்னணியிலேயே, தொழிலாளர் தேசிய முன்னணி என்ற கட்சியை நாம் யாப்பு எழுதி உருவாக்கினோம்.
இவ்வாறான நிலையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிலிருந்து வருகை தந்துள்ள ஒரு கூட்டம், தொழிலாளர் தேசிய முன்னணியை இல்லாதொழிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன் ஒரு கட்டமாகவே, என்னை அந்தக் கட்சியிலிருந்து வெளியேற்றிவிட்டு, அந்தக் கட்சியை அவர்களின் தேவைக்கு ஏற்ப நடத்த முயற்சித்து வருகின்றனர்.
இதனாலேயே கட்சியை கலைக்கும் தீர்மானத்தை எடுத்து, தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நான் விலகினேன். இனிவரும் காலங்களில் அவர்கள் வேறொரு அரசியல் கட்சியை உருவாக்கி, செயல்படுவதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது.
தொழிலாளர் தேசிய முன்னணி மூலம் அடைய நினைத்த அரசியல் இலக்குகளை, எதிர்வரும் காலத்தில் பாரிய மலையக கொள்கை சார்ந்த ஜனநாயக அரசியலின் ஊடாக அடைய முயற்சிப்பேன்.
இதேவேளை, என்னுடன் பேசி தீர்க்க வேண்டிய பல்வேறு விடயங்கள் காணப்பட்ட போதிலும், அதைப் பேசி தீர்த்துக்கொள்ளாமல், நயவஞ்சகமான முறையில் என்னை கட்சியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வாறு தொழிலாளர் தேசிய முன்னணியால் முன்னெடுக்கப்பட்ட நயவஞ்சக செயல்பாடுகளை, மக்களுக்கு வெளிப்படுத்துவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2/22/2021
| 0 commentaires |
தமிழ் மொழி தின சிறப்பு நிகழ்வு
உலக தாய்மொழி தினத்தையொட்டி மட்டக்களப்பில் தமிழ் மொழி தின சிறப்பு நிகழ்வுவொன்று தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் நடாத்தப்பட்டது.
2/21/2021
| 0 commentaires |
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; 32 பேருக்கு நேரடி தொடர்பு குற்றச்சாட்டு
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் 32 பேர் நேரடியாக மனிதப் படுகொலையாளிகளாகவும் தாக்குதல்களை திட்டம் தீட்டியவர்களாகவும் குற்றஞ்சாட்டப்படவுள்ளதுடன், தாக்குதல்களுடன் தொடர்புற்று தடுத்து வைக்கப்பட்டுள்ள 241 பேர் மீதும் வழக்கு தொடரப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
தாக்குதல்களுடன் தொடர்புடைய 273 சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகள் தொடர்பாக தயாரிக்கப்பட்ட எட்டு கோப்புகள் ஏற்கனவே சட்ட மாஅதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் பிரகாரம் 'நல்லாட்சி' அரசாங்கத்தின் பல பிரபல அரசியல்வாதிகள் மற்றும் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நேரடியாக அந்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். குறிப்பாக தாக்குதலைத் தடுக்கத் தவறியது தொடர்பான குற்றச்சாட்டுகள் தீவிரமானவையென குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்களுடன் தொடர்புடைய ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
தாக்குதல்கள் தொடர்பாக 754 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் விசாரிக்கப்பட்டு குற்றச்சாட்டுகளுடன் தொடர்பு படாவிடின் விடுவிக்கப்பட்டவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பான விசாரணையின் அறிக்கையையும், தேசிய பாதுகாப்பு தொடர்பான துறை மேற்பார்வைக் குழுவின் அறிக்கையையும் ஆய்வு செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமைச்சர் சாமல் ராஜபக்ஷ தலைமையில் ஒரு குழுவை நியமித்துள்ளாரென்பதும் குறிப்பிடத்தக்கது.
| 0 commentaires |
நெற்களஞ்சிய சாலை திறப்பு
2/19/2021
| 0 commentaires |
மட்டக்களப்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் சதோச விற்பனை நிலையங்கள்
| 0 commentaires |
‘சீனோப்பியா’ வியாதிக்கான காரணங்கள் - தோழர் மணியம் சண்முகம்
2/18/2021
| 0 commentaires |
இணைய வழி கருத்தரங்கம் - பெண்கள்மட்டும்
இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தின் அவசியம் குறித்து எதிர்வரும் சனியன்று இணையவழி கருத்தரங்கு ஒன்று இடம்பெறவுள்ளது. இலங்கை நேரம் மாலை 7.30 மணிக்கு இவ்வரங்கு ஆரம்பமாகும். இந்நிகழ்வினை புகலிட பெண்கள் சந்திப்பு குழுவினர் ஏற்பாடுசெய்துள்ளனர்.
| 0 commentaires |
கொத்தியாபுலை கலைவாணி வித்தியாலயம் 1C பாடசாலையாக தரமுயர்வு
| 0 commentaires |
நாளை மட்டக்களப்பு வருகின்றார் வர்த்தக அமைச்சர்
| 0 commentaires |
வேறு நாடொன்றின் கட்சி எமது தேர்தலில் போட்டியிட முடியாது
வேறு நாடு ஒன்றின் கட்சி எமது நாட்டில் பதிவு செய்வதற்கோ தேர்தலில் போட்டியிடுவதற்கோ முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
இலங்கைக்குள் பாரதிய மக்கள் கட்சியை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக மேலும் கூறுகையில்,
வெளிநாட்டு கட்சி ஒன்று இலங்கைக்குள் கிளைகளை அமைத்து தேர்தலில் போட்டியிட முடியாது. அவ்வாறான கட்சி ஒன்றை பதிவு செய்யவும் முடியாது. அது எமது நாட்டு கட்சி ஒன்றாக இருந்தால் இலங்கை பிரஜைகளால் கட்சி ஒன்றை அமைத்து, கடந்த 4 வருடங்களாக கட்சியாக செயற்பட்டு, தேர்தல்களில் போட்டியிட்டிருக்கும் பின்னணி இருக்குமாக இருந்தால்தான், அந்த கட்சியை பதிவுசெய்து ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சியாக போட்டியிட முடியுமாகின்றது.
அவ்வாறு இல்லாமல் எந்தளவு பிரபலமான கட்சியாக இருந்தாலும் நாட்டுக்குள் கிளைகளை அமைத்து தேர்தல்களில் போட்டியிட முடியாது. அத்துடன் அவ்வாறான கட்சிகள் இலங்கையில் கட்சியொன்றுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடவும் சட்டத்தின் பிரகாரம் முடியாது.
எமது சட்டத்தின் பிரகாரம் நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் கூட்டணிகளை அமைத்துக்கொள்ள முடியும். ஆனால் வெளிநாட்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தல்களில் போட்டியிட முடியாது என்றார்.
2/14/2021
| 0 commentaires |
யாழ்- அகற்றுச்சங்கம் ஒரு வரலாற்றுப்பதிவு
2/13/2021
| 0 commentaires |
மட்/முதல்வரின் வீட்டு வேலையாட்களுக்கு மாநகரசபை சம்பளம்
மட்டக்களப்பு மாநகர முதல்வர் சரவணபவனின் வீட்டு வேலைகளைச் செய்வதற்காக அமர்த்தப்பட்டிருந்த இரண்டு தொழிலாளர்களுக்கு மாநகரசபை ஊடாக சம்பளம் வழங்கப்பட்டு வந்த செய்திகள் அம்பலமாகியுள்ளன. இதனைத்தொடர்ந்து இதுவரை அவர்களுக்காக மாநகர சபையால் செலவு செய்யப்பட்ட இருபது இலட்சம் ரூபாய்களையும் திருப்பி அறவிட ஆணையாளரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
| 0 commentaires |
ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளராக யோகேஸ்வரி நியமனம்..
| 1 commentaires |
கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்தர் கற்கை நிறுவனத்தின் பணிப்பாளராக பாரதி நியமனம்
| 0 commentaires |
டெங்கு நோய்க்கெதிரான களப்பணியில் எம்.பி
| 0 commentaires |
யாழ்ப்பாணத்தை அதிரவைத்த கன்பொல்லையில் வெடித்தகுண்டு
| 0 commentaires |
சுமந்திரனுக்கு 'விசேட' பாதுகாப்பை மீண்டும் வழங்கவேண்டும்- சஜித்தும் ஹக்கீமும் கூட்டாக கோரிக்கை
எம்.ஏ. சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. அவரின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு மீண்டும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டனர்.
பாராளுமன்றத்தில் நேற்று (10) எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து தெரிவிக்கையில்,
தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம். ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. அவரது உயிர்பாதுகாப்பை கருத்திற்கொண்டே விசேட பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. அவர் பாதயாத்திரை சென்றதை அடிப்படையாகக் கொண்டு அவரது பாதுகாப்பை நீக்குவது ஒழுக்கமான செயலல்ல. அதனால் அவருக்கு இருந்த பாதுகாப்பை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
2/11/2021
| 0 commentaires |
வாகரையில் வாகை சூடிய தமிழ் மக்கள் விடுதலை புலிகள்
இதன் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையில் இருந்த பிரதேசசபையின் அதிகாரம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சினால் கைப்பற்றப்பட்டது, கிழக்கு மாகாணம் இயல்புக்கு திரும்பிய பின்னர் 2008ஆம் ஆண்டு பிரதேச சபைக்கான தேர்தலிலும் வாகரை பிரதேச சபையின் தவிசாளராக தெரிவாகியிருந்தவர் கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது.
| 0 commentaires |
மட்/வெல்லாவெளி தும்பாலை- விவேகானந்தபுரம் பாலம்
குறித்த பாலமானது மட்/பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக நிர்மாணிக்கப்படவுள்ளது அத்தோடு வரும் நாட்களின் அந்தவீதிக்கு 1Km கொங்கிறீட் பாதையும் அமைக்கப்பட நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
2/10/2021
| 0 commentaires |
யாழ். பாலியல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றியளித்துள்ளது
யாழ். போதனா வைத்தியசாலையில் முதற்தடவையாக மேற்கொள்ளப்பட்ட பாலியல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றியளித்துள்ளது.
மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
இந்த அறுவைச் சிகிச்சையை விசேட வைத்திய நிபுணர் இளஞ்செழியன் பல்லவன் சுமார் 12 மணித்தியாலத்தில் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார்.
| 0 commentaires |
ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படுமா? புதைக்க இடமளிப்போம்: பிரதமர்
ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இடமளிப்போம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்றத்தில் தெரிவித்தார்
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்,
“நீரின் ஊடாக கொரோனா வைரஸ் தொற்றுவதற்கு வாய்ப்பு இல்லையென சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே, பாராளுமன்றத்தில் நேற்று (09) தெரிவித்தார். அப்படியாயின், மரணமடையும் முஸ்லிம்களை புதைப்பதற்கு இடைமளிப்பீர்களா” என வினவினார்.
அதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, “ புதைப்பதற்கு இடமளிப்போம்” என்றார்.
எழுந்து நின்றிருந்த மரிக்கார் எம்.பி. “மிக்க நன்றி” எனக் கூறியமர்ந்தார்.
| 0 commentaires |
கொரோனா தடுப்பூசி இலங்கையில் உற்பத்தி செய்வது குறித்து ஆராய்வு
கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பில் எதிரணி விமர்சித்தாலும் அந்த செயற்பாடு வெற்றிகரமாக இடம்பெறுகிறது.அந்த மருந்தையும் இலங்கையிலேயே உற்பத்தி செய்வது குறித்து இராஜதந்திர பேச்சுக்கள் ஜனாதிபதியின் ஆலோசனைப்படி இடம்பெற்று வருவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,
பல்வேறு வழிகளில் எதிர்க்கட்சியினரால் விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும் எமது நாட்டில் மட்டுமன்றி பல நாடுகளிலும் கொவிட் தடுப்பூசிகளை வழங்குகின்ற சவால்கள் உள்ளன. கொவிட் கட்டுப்பாட்டிலேயே அனைத்து நாடுகளினதும் பொருளாதாரமும் தங்கியுள்ளது. இதுவரை ஒரு இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இலங்கையில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுவிட்டது. நாளையாகும்போது முதலாவது சுற்றில் எமக்கு கிடைத்த தடுப்பூசிகள் அனைத்தையும் வழங்கி நிறைவுக்கு கொண்டுவர முடியும்.
இன்னும் இரண்டு மாதங்களில் ஏற்கனவே பெற்றவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும். சீனாவிலிருந்து இந்த வார இறுதிக்குள் ஒருதொகை தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. அதேபோல சுகாதார அமைச்சு, 18 மில்லியன் எஸ்ரா செனிகா தடுப்பூசிகள் இறக்குமதி செய்துள்ளது. அதற்கமைய சுமார் 10 மில்லியன் பேருக்கு மே மாதத்திற்குள் இந்த தடுப்பூசிகளை வழங்கி நிறைவுபடுத்தலாம். 4000 நிலையங்கள் இதற்காக அமைக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் 22.2 மில்லியன் மக்கள் தொகை கொண்ட எமது நாட்டில் 45 சதவீத மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்கிவிடமுடியும். அதேபோல ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசி 100 வீதம் வெற்றியளித்திருப்பதாகவே அறியமுடிகிறது. ஆகவே அந்த மருந்தையும் இலங்கையிலேயே உற்பத்தி செய்யும் அளவுக்கான இராஜதந்திர பேச்சுக்கள் ஜனாதிபதியின் ஆலோசனைப்படி இடம்பெற்று வருகின்றன.
2/09/2021
| 0 commentaires |