1/27/2021
| 0 commentaires |
மக்கள் குறைகள் மீது கவனம்கொள்ளும் பிள்ளையான்
1/26/2021
| 0 commentaires |
டெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணி: தொடரும் பதற்றம் - போராட்டக்காரர் ஒருவர் பலி
குடியரசு தினத்தில் டெல்லியில் விவசாயிகள் நடத்தத் திட்டமிட்ட டிராக்டர் பேரணி போலீசார் வைத்த தடுப்பரண்களை உடைத்துக் கொண்டு இன்று (ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை) காலை தலைநகர் டெல்லிக்குள் நுழைந்தன. இதையடுத்து, போராட்டக்காரர்களை தடுப்பதற்காக காவல்துறையினர் பல இடங்களில் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இதில் பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த கைகலப்பில் 86 அதிகாரிகள் காயமடைந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. அதே சமயம், போராட்டக்காரர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
சுமார் 6-7 இடங்களில் இருந்து தனித்தனியே புறப்பட்ட டிராக்டர் பேரணிகளில் ஒன்று பகல் சுமார் 12 மணி அளவில் மத்திய டெல்லியின் ஐ.டி.ஓ. பகுதி வரையும், அடுத்து மதியம் இரண்டு மணியளவில் செங்கோட்டை பகுதியையும் அடைந்தன.
1/25/2021
| 0 commentaires |
பிரபாகரனால் பெற்றுக்கொடுக்கமுடியாத உரிமைகளை சம்பந்தனால் பெற்றுக்கொடுக்கமுடியுமா?
போராட்ட அரசியலால் பெற்றுக்கொடுக்க முடியாத, தமிழர்களுக்கான தீர்வை எவராலும் பெற்றுக்கொடுக்க முடியாது என, பின்தங்கிய கிராமிய பிரதேச அபிவிருத்தி மற்றும் மனைசார் கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு வர்த்தக பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 4ஆவது ஆண்டு நிறைவையொட்டி மட்டு.மாவட்ட பட்டிருப்புத் தொகுதிக்கான தேசிய மாநாடு பெரமுனவின் மட்டு. மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தலைமையில் பெரியபோரதீவில் நேற்றுமுன்தினம் (23) இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈழப்போராட்டம் 2009, ஆம் ஆண்டிலேயே மெளனிக்கப்பட்டு விட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரால் பெற்றுக்கொடுக்க முடியாத தமிழீழத்தை என்னுடைய தாத்தாவாலோ உங்களுடைய தாத்தாவாலோ சம்பந்தனது தாத்தாவாலோ பெற்றுக்கொடுக்க முடியாது என தெரிவித்தார்.
| 0 commentaires |
மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு
| 0 commentaires |
வாழைச்சேனையில் அதிகரிக்கும் டெங்கு நோய் பரவல்
| 0 commentaires |
வவுணதீவு காஞ்சிரங்குடா பிரதேசத்துக்கு சுத்தமான குடிநீர்
1/24/2021
| 0 commentaires |
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று கூறும் பாஜகவுக்கு ராகுல் காந்தி கண்டனம்
| 0 commentaires |
மேய்ச்சல்தரை பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குக---நீதிபதி பணிப்புரை
மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரை வழக்கு முடியும் வரையில் பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறும், மேய்ச்சல் தரையைப் பாவிப்பதை தடைசெய்யவேண்டாம் எனவும் மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் தெரிவித்தார்.
பண்ணையாளர்கள் சார்பில் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரை அபகரிப்பு தொடர்பான வழக்கு, கடந்த மாதம் 18ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது, பிரதிவாதிகளும் மேய்ச்சல்தரையில் அத்துமீறியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரும் நீதிமன்றில் ஆஜராகியிருந்ததாகவும் சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் தெரிவித்தார்.
இதன்போது, மேய்ச்சல் தரையில் பண்ணையாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து, குறிப்பிட்ட அதிகாரிகள் மேய்ச்சல்தரை பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும், பண்ணையாளர்கள் மேய்ச்சல்தரையை பாவிப்பதை தடைசெய்யக்கூடாது, அதனை நடைமுறைப்படுத்துவதாக அரச சட்டத்தரணி ஏற்றுக்கொண்டதுடன், அது தொடர்பில் உரிய அதிகாரிகளை அறிவுறுத்துவதாக நீதிமன்றுக்கு வாக்குறுதியளித்தாகவும் சட்டத்தரணி தெரிவித்தார்.
தற்போது மேய்ச்சல்தரை அபகரிப்பட்டதாக தெரிவிக்கப்படும் பகுதியை தவிர, அப்பகுதியில் எந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்ககூடாது என்பதற்கும் அரச சட்டத்தரணி இணக்கம் தெரிவித்தார்.
வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரையில் தற்போது பிடிக்கப்பட்டுள்ள காணியை அவ்வாறே பேணுமாறும் வேறு எந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்ககூடாது என பணிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி ரத்தினவேல் தெரிவித்தார்.
அதேவேளை, இந்த வழக்கு, மார்ச் மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
| 0 commentaires |
வாசு குணமடைந்தார்
| 0 commentaires |
நூல்களூடாக சில நினைவுகள்- 'கிளிவெட்டி' குமாரதுரை
1/23/2021
| 0 commentaires |
ஆசிரிய நியமனங்களில் பின்தங்கிய பிரதேசங்களுக்கே முன்னுரிமை - கிழக்கிலங்கை உயர்க்கல்வி மாணவர் ஒன்றியம்
| 0 commentaires |
கிழக்கின் அரசியல் எழிச்சியில் 'தேனீ' யின் வகிபாகம் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்-பிள்ளையான்
மனித உரிமை போராளியும் ஊடகவியலாளருமான யேர்மனியை வசிப்பிடமாக கொண்ட ஜெமினி என்றழைக்கப்படும் கங்காதரன் அவர்கள் காலமாகியதை ஒட்டி பலத்தரப்பட்டோரும் அஞ்சலி செலுத்திவருகின்றனர். இந்நிலையில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைவருமான சந்திரகாந்தன் அவர்களும் தனது முகநூல் அஞ்சலி குறிப்பொன்றினை வெளியிட்டுள்ளார்.
| 0 commentaires |
ஜனநாயக விழுமியங்களையும் மனித உரிமைகளின் சாரங்களையும் கட்டிக்காத்த தோழர் ஜெமினி- ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி
1/21/2021
| 0 commentaires |
வல்வட்டித்துறை நகராட்சியின் சாதியபாகுபாட்டுக்கு எதிராக பொது நலவழக்கு
| 0 commentaires |
புதிய அதிபர் மற்றம் நம்பிக்கைத்தருகின்றது-வீரமணி
அமெரிக்காவின் 46 ஆவது குடியரசுத் தலைவராக 78 வயது நிரம்பிய ஜோபைடன் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று, நேற்று பதவியேற்றார். அவருடன் ஜனநாயகக் கட்சி சார்பில் குடியரசுத் துணைத் தலைவராக தமிழ்நாட்டுத் தொடர்புள்ள - கருப்பின மக்களுக்கான போராளி முற்போக்கு சிந்தனையுள்ள சட்ட நிபுணர் திருமதி கமலா ஹாரிஸ் அவர்களும் துணை தலைவராக பதவியேற்றார்!
1/15/2021
| 0 commentaires |
சமூக அநீதி குறித்த நிபுணர் குழு
| 0 commentaires |
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது - மத்திய அரசு
டெல்லியில் போராடி வரும் விவசாய அமைப்பு பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய 9-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேவேளையில் திருத்தங்கள் கொண்டு வரத் தயார், ஆனால் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துவிட்டது.
இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏற்கனவே 8 கட்ட பேச்சுவார்த்தையில் முக்கியமான பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படவில்லை. இந்த நிலையில் இன்று 9-ம் கட்ட பேச்சுவார்த்தை மத்திய அரசுக்கும் - விவசாயிகள் சங்கங்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை சுமார் 5 மணி நேரம் நீடித்தது. இறுதியில் மத்திய அரசு நடத்திய 9-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது
3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் 51 நாட்களாக போராடி வருகின்றனர். மேலும், 10-ம் கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| 0 commentaires |
பொங்கலன்று ஏறாவூரில் புடவைக் கடைகளுக்கு சீல்
கொரோனா வைரஸ் தடுப்புச் செயலணியால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை அனுசரிக்காமல், புடவைக் கடைகளுக்குள் வியாபாரம் மேற்கொண்டமைக்காக 6 புடவைக் கடைகளுக்கு, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவினர் சீல் வைத்துள்ளனர்.
கொரோனா தவிர்ப்பு செயலணிக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களின்படி, கட்ந்த திங்கட்கிழமை (11) முதல் இன்று (14) வரை பலசரக்குக் கடைகள், புத்தக நிலையங்கள், எரிபொருள் நிரப்பு நிலையம், மருந்தகங்கள், சிகையலங்கார நிலையங்கள், அத்தியவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகள் அனைத்தும் மூடப்படுதல் வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
இந்த அறிவித்தலை மீறி, சில புடவைக் கடைகளுக்கு உள்ளே தைப்பொங்கல் உடுதுணிகள் வியாபாரம் இடம்பெற்றாலேயே தாம் இவ்வாறு கடைகளுக்குச் சீல் வைத்ததாக பொதுச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
அரசாங்க இலச்சினையுடன் கடைகளில் ஒட்டப்பட்டுள்ள அந்த அறிவித்தலில் தனிமைப்படுத்தப்பட்ட வர்த்தக நிலையம் கண்காணிக்கப்படுகின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இங்கு வெளியாட்கள் எவரும் உட்செல்ல வேண்டாம். குறிப்பிடப்பட்ட 12.01.2021 தொடக்கம் 25.01.2021 வரை இக்காலப் பகுதியினுள் வழங்கப்பட்ட அறிவுரைகளை மீறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவீர்கள் என்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஏறாவூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
1/13/2021
| 0 commentaires |
ஜோசேப் பரராஜசிங்கம் கொலைவழக்கு--நாளை இறுதி தீர்ப்பு
1/12/2021
| 0 commentaires |
திகிலிவெட்டை பாலத்தினை நிர்மாணித்தல்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படியான திகிலிவெட்டை பாலத்தினை நிர்மாணித்தல் தொடர்பான இரண்டாம் கட்ட ஆய்வுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினல் இன்று இடம்பெற்றது. எதிர் வருகின்ற ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் அதனடிப்படையில்
1/07/2021
| 0 commentaires |